perumal_r@ymail.com
perumal_r@ymail.com
Monday, June 10, 2019
Monday, April 2, 2018
1
காரிமங்கலம்
காரிமங்கலம் வரலாற்றுச்சிறப்பு:
காரிமங்கலம் எனும்பெயர் தகடூர் ஆண்ட அதியமான் நெடுமான் அஞ்சி காலத்தில் காரிமலையமான் திருமுடிக்காரி என்னும் அரசன் படை நிறுத்திய இடம் பிற்காலத்தில் காரிமங்கலம் எனப் பெயர்க் கொள்ளலாயிற்று என்பர். மங்கலம்,பாடி போன்ற சொற்கள் படைநிறுத்திய இடங்களைக் குறிப்பதாகும்.
இவ்வூர் தகடூர் நாட்டின் ஒரு உட்பிரிவு நாடான கோவூர் நாட்டில் அடங்கிய ஒரு பகுதி
இவ்வூர்ப் பழம்பெருமையைச் சொல்லும் கல்வெட்டுகள் இவ்வூரை “கோவூர் நாட்டு காரிமங்கலத்து” எனக் குறிக்கின்றன.
சிந்தல்பாடியில் இருக்கும் நடுகல்லொன்றில் கோவூர் நாட்டு காரிமங்கலங் “கங்கஅதி அரைசரசரோடு தொறுக்கொள்ள” ஆநிரை கவர்தல் நடைபெற்ற போரி வீரனொருவன்இறந்ததைக்குறிக்கிறது.
இந்த நடுகல் காலம் 6-ம் நூற்றாண்டு, பல்லவ மகேந்திரவர்மர் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக இருந்ததையும் குறிக்கிறது.
அதேபோல கதிரம்பட்டி நடுகல்லும் கோவூர்நாட்டு காரிமங்கலத்து குளவர் மக்கள் வீரர் இருவர் தொறுக் கொள்ளலில் இறந்த செய்தியைக் குறிக்கிறது. இந்நடுகல் இரண்டாம் மகேந்திரன் ஆட்சியாண்டில் எடுக்கப்பட்டதாகும்
2
தகடூர் அதியமான் காலம் கிபி ஒன்று மற்றும் இரண்டாம் நூற்றாண்டு என்பர். ஆயிரத்தென்னூறு ஆண்டுகளாக “காரிமங்கலம்” எனும் பெயர் மாறாமல் கொண்டுள்ள ஊர் இது என்பது பெருமை கொள்ளத்தக்கது.
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
காரிமங்கலம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. சுமார் 3 சதுர கிலோ மீட்டர்
சுற்றளவுள்ளது காரிமங்கலம் பேரூராட்சியாகும். இவற்றில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட
பொதுமக்கள் வசித்து வருகின்றனர். பேரூராட்சிக்குட்பட்ட
பகுதிகளில் ஓட்டல்கள், தனியார், அரசு மருத்துவமனைகள், காய்கறி சந்தை, திருமண மண்டபங்கள்
மற்றும் குடியிருப்புகள்,
வீடு
கரியமங்கலம் மக்களின் சராசரி கல்வியறிவு 68% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 57%, பெண்களின் கல்வியறிவு 49%
ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. கரியமங்கலம்
காரிமங்கலம் வட்டம், தமிழ்நாட்டின் தர்மபுரி
மாவட்டத்தில் உள்ள ஏழு வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டம், தருமபுரி மாவட்டத்தின் பாலக்கோடு மற்றும் அரூர் வட்டங்களைச் சீரமைத்து
பிரித்து, காரிமங்கலம் பேரூராட்சியைத் தலைமையிடமாகக் கொண்டு 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் நாள்
உருவாக்கப்பட்டது. இந்த வட்டத்தின் கீழ் 52 வருவாய் கிராமங்கள் உள்ளன
3
காரிமங்கலம் அருணேசுவரர் கோயில்
காரிமங்கலம் அருணேசுவரர் கோயில் என்பது தர்மபுரி
மாவட்டம், காரிமங்கலத்தில் உள்ள சிவன் கோயிலாகும். இது காரிமங்கலத்தில் ஒரு
சிறு குன்றின் மீது அமைந்துள்ளதுகோயிலுக்குச் செல்ல குன்றுக்கு படிக்கட்டுகளும், சிமெண்டு சாலையும் உள்ளன.
கோயிலின் வரலாறு
இக்கோயிலின் இறைவன் ஆரணீசுவரமுடையார் என கல்வெட்டுகளில்
அழைக்கப்பட்டுகிறார். இக்கோயிலின் பழமையான கல்வெட்டு என்றால் அது 11 ஆம் நூற்றாண்டைச்
சேர்ந்த தெளிவற்ற கன்னடக் கல்வெட்டாகும். இந்தக் கோயிலின் கோபுரம் 1898 இல் இராமசெட்டி
என்பவரால் புதுப்பிக்கப்பட்டது.
இக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. திருவுண்ணாழி, இடைநாழி, மகாமண்டபம், முன்மண்டபம், திருமண மண்டபம், வேள்வி மண்டபம்
ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அம்மன் கோயில் கோயிலின்
வடமேற்கே அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் தெற்கு நோக்கி இராச கோபுரம் ஐந்து நிலைகளுடன்
உள்ளது.
5
சிறப்புகள்:
குன்றின்இறைவன்:ஆருணேசுவரர்(எ) ஆரண்யேசுவரர்இறைவி:உண்ணாமுலை, அபீதகுஜாம்பிகை
உச்சியில் கோவில். ஜெய்னூர் கிராமத்தில் வசித்த
ஜைனர்கள் சைவ மதத்தை
எதிர்க்க அவர்களிடம் போரிட வந்த குலோத்துங்க சோழன் தான் கனவு கண்டமாதிரியே போரில் வெற்றி
பெற்று இந்த இடத்தில் ஓர் சிவாலயம் அமைக்க இடம் தேடியபோது புதரிலிருந்து
வெளிப்பட்ட லிங்கம்-ஆரண்யத்தில் கோவில் கொண்டதால் ஆரணேஸ்வரர். அரச
மரத்தடியில் நாகர்கள்.
அரசினர் கலைக்கல்லூரி
அரசினர் கலைக்கல்லூரி, காரிமங்கலம் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் செயல்பட்டுவரும் தமிழக
அரசின் கலை மற்றும் அறிவியல் கல்லூரியாகும்.
காரிமங்கலம் கிருஷ்ணகிரி சாலையில் சஞ்சீவிராயன் மலையில்
ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த மலை மேல் ஏராளமான குரங்குகள் உள்ளன.
காரிமங்கலம் சிறப்பு
மாண்புமிகு. கே.பி.அன்பழகன்B.Sc.,MLA
உயர்கல்வித் துறை அமைச்சர், எங்க ஊர்காரர்
மாண்புமிகு. கே.பி.அன்பழகன்B.Sc.,MLA
உயர்கல்வித் துறை அமைச்சர், எங்க ஊர்காரர்
6
காரிமங்கலம்
எங்க ஊர்ல
ஜல்லிக்கட்டு
காரிமங்கலத்தில் 18 பட்டியும் ‘’செவிட்டு ராமசாமி கோவில் ‘’ சார்பாக.. ஜல்லிக்கட்டு
குலோத்துங்க சோழனால் காரிமங்கலம் ஒட்டிய சிறு குன்றில் எடுக்கப்பட்ட “ஆருனேஸ்வரர் கோவிலும், பிற்காலத்தில் இப்பகுதியை ஆண்ட ஆட்சியாளர் ஒருவராகிய செவிட்டு ராமசாமி என்பவரின் ஜீவசமாதிக் கோவில்,திரௌபதியம்மன் கோவில் சிறு தெய்வக்கோவில்களும் செவிட்டு ராமசாமி கோவில் முன் ஜல்லிக்கட்டு நடப்பது இதன் சிறப்பு.
காரிமங்கலத்தில் 18 பட்டியும் ‘’செவிட்டு ராமசாமி கோவில் ‘’ சார்பாக.. ஜல்லிக்கட்டு
குலோத்துங்க சோழனால் காரிமங்கலம் ஒட்டிய சிறு குன்றில் எடுக்கப்பட்ட “ஆருனேஸ்வரர் கோவிலும், பிற்காலத்தில் இப்பகுதியை ஆண்ட ஆட்சியாளர் ஒருவராகிய செவிட்டு ராமசாமி என்பவரின் ஜீவசமாதிக் கோவில்,திரௌபதியம்மன் கோவில் சிறு தெய்வக்கோவில்களும் செவிட்டு ராமசாமி கோவில் முன் ஜல்லிக்கட்டு நடப்பது இதன் சிறப்பு.
Sunday, March 11, 2018
Sunday, September 29, 2013
![]() |
| அருள்மிகு எட்டுக்கைஅம்மன் |
பண்ணை குலமக்களின் குலதெய்வம்
அருள்மிகு எட்டுக்கைஅம்மன்
அருள்மிகு
எட்டுக்கைஅம்மன் திருக்கோவில்,
ஸ்ரீ சென்றயபெருமால்
ராக்கி பட்டி
[ Sri Sendraya Perumal Kovil,
ஸ்ரீ சென்றயபெருமால்
ராக்கி பட்டி
[ Sri Sendraya Perumal Kovil,
Rakkipatti,
Salem]
எட்டுக்கை அம்மன் எனும் சிறப்பு
எட்டுக்கை அம்மன் எனும்
சிறப்பு கரங்களினாலேயே காரண பெயர் பெற்று விளங்குகிறது. இது அன்னையின் திருக்கோலம். பராசக்தியின் பல்வேறு வடிவங்களில் கொற்றவை எனும் காளி, துர்க்கை, போன்ற தெய்வங்கள் வட திசையை நோக்கி குடி கொள்பவர்கள். இந்த வகையில் தீமையை அழித்து
நன்மையை நிலை நிறுத்தும் தேவி வடிவங்களில் ஒன்றே அன்னை
எட்டுக்கை அம்மன்.
இது போன்ற மற்ற தெய்வ வடிவங்களில் அமைய பெற்றிருக்கும் அசுரனின் வடிவம் அசுரனை காலால் மிதிப்பது போன்றும், அல்லது நீண்ட சூலாயுதத்தால் சம்ஹாரம் செய்வது போன்றும் அமைந்திருக்கும். ஆனால் , எட்டுக்கை அம்மனின் சிறப்பு அசுரனை அடியோடு சாய்த்து வெற்றி வாகை சூடி அருள் வழங்கும் காட்சியாக உள்ளது.
மேலும் சிவனில் இவள் பாதி என உணர்த்தும் வகையில் இடது கரத்தில் விஸ்மயா ஹஸ்த்தம் எனும் வியப்பினை ஓட்டும் முத்திரையில் அக்னி, வில், மணி, கபாலம் இவைகளையும் , வலது கரத்தில் டமருகம் ( உடுக்கை ), எறி சூலம், கட்கம் ( சிறிய கத்தி ), வேல், இவைகளையும் தனது எட்டு கரத்தில் தாங்கி அருள்பாலிக்கிறாள்.
அன்னையின் வலபுற காதில் மகர குண்டலமும், இடபுற காதில் பத்திர குண்டலமும் அணிந்துள்ளது ஆண், பெண், சரி பாதி என்ற தோற்றத்தை நினைவு கூர்கிறது.
ஜுவாலா கேசம் ( அக்னி கூந்தல் ) கொண்ட அன்னை காளி தேவியின் வடிவமே ஆயினும் பரமஹம்சர் தேவி அன்பின் வடிவமே என்கிறார்.
வீரத்தின் அடையாளமாக அன்னை உத்தங்குடிகா ஆசனம் இட்டு தனது வலது பாதத்தை பீடத்தின் மேலும், இடது பாதத்தை ஊன்றியும் அமைந்தவாறு வடிவமைத்துள்ளது சிற்ப்பியின் கலைத்திறனையும், சாஸ்த்திர ஙுனுக்கத்தையும் நன்கு வெளிப்படுத்துகிறது.
இது போன்ற மற்ற தெய்வ வடிவங்களில் அமைய பெற்றிருக்கும் அசுரனின் வடிவம் அசுரனை காலால் மிதிப்பது போன்றும், அல்லது நீண்ட சூலாயுதத்தால் சம்ஹாரம் செய்வது போன்றும் அமைந்திருக்கும். ஆனால் , எட்டுக்கை அம்மனின் சிறப்பு அசுரனை அடியோடு சாய்த்து வெற்றி வாகை சூடி அருள் வழங்கும் காட்சியாக உள்ளது.
மேலும் சிவனில் இவள் பாதி என உணர்த்தும் வகையில் இடது கரத்தில் விஸ்மயா ஹஸ்த்தம் எனும் வியப்பினை ஓட்டும் முத்திரையில் அக்னி, வில், மணி, கபாலம் இவைகளையும் , வலது கரத்தில் டமருகம் ( உடுக்கை ), எறி சூலம், கட்கம் ( சிறிய கத்தி ), வேல், இவைகளையும் தனது எட்டு கரத்தில் தாங்கி அருள்பாலிக்கிறாள்.
அன்னையின் வலபுற காதில் மகர குண்டலமும், இடபுற காதில் பத்திர குண்டலமும் அணிந்துள்ளது ஆண், பெண், சரி பாதி என்ற தோற்றத்தை நினைவு கூர்கிறது.
ஜுவாலா கேசம் ( அக்னி கூந்தல் ) கொண்ட அன்னை காளி தேவியின் வடிவமே ஆயினும் பரமஹம்சர் தேவி அன்பின் வடிவமே என்கிறார்.
வீரத்தின் அடையாளமாக அன்னை உத்தங்குடிகா ஆசனம் இட்டு தனது வலது பாதத்தை பீடத்தின் மேலும், இடது பாதத்தை ஊன்றியும் அமைந்தவாறு வடிவமைத்துள்ளது சிற்ப்பியின் கலைத்திறனையும், சாஸ்த்திர ஙுனுக்கத்தையும் நன்கு வெளிப்படுத்துகிறது.
பண்ணைக்குல சிறப்பு :
கொங்கு வெள்ளாளன் ஆட்டுப்பண்ணை ,மாட்டுப் பண்ணைகளை வைத்துப் பாதுகாத்தவர்கள் .
பெரிய நிலத்திற்குரியவன் பண்ணைக்காரன் எனப்பட்டான் .
வயலில் பணி செய்வோன் பண்ணை ஆள் எனப்பட்டான் .
பெருநிலக் கிழாரானவர் பண்ணைக் குலத்தினர் ஆயினர்.
பண்ணைக் குலத்தினர் சோழனுக்கு படைமக்களாக இருந்தனர்.
குளித்தலை வட்டம் ஆந்திப நல்லூரில் பண்ணையார் வாழ்ந்தனர் என்று
வாலசுந்தரக் கவி கூறுவார். இவருக்கு கொங்கு மண்டல சதகம்பாட இந்தப் பண்ணையார் உதவினராம்.
பண்ணைக்கீரை உண்ணார். ஏழூர் , கீரம்பூர், அனுமன் பள்ளி , கரூர் , தும்மங்குறிச்சி, தாழம்பாடி , வாழவந்தி , ஆகிய ஊர்கள் பண்ணைக் குலத்தாரின் காணியூர்களாம்.
கொங்கு வெள்ளாளன் ஆட்டுப்பண்ணை ,மாட்டுப் பண்ணைகளை வைத்துப் பாதுகாத்தவர்கள் .
பெரிய நிலத்திற்குரியவன் பண்ணைக்காரன் எனப்பட்டான் .
வயலில் பணி செய்வோன் பண்ணை ஆள் எனப்பட்டான் .
பெருநிலக் கிழாரானவர் பண்ணைக் குலத்தினர் ஆயினர்.
பண்ணைக் குலத்தினர் சோழனுக்கு படைமக்களாக இருந்தனர்.
குளித்தலை வட்டம் ஆந்திப நல்லூரில் பண்ணையார் வாழ்ந்தனர் என்று
வாலசுந்தரக் கவி கூறுவார். இவருக்கு கொங்கு மண்டல சதகம்பாட இந்தப் பண்ணையார் உதவினராம்.
பண்ணைக்கீரை உண்ணார். ஏழூர் , கீரம்பூர், அனுமன் பள்ளி , கரூர் , தும்மங்குறிச்சி, தாழம்பாடி , வாழவந்தி , ஆகிய ஊர்கள் பண்ணைக் குலத்தாரின் காணியூர்களாம்.
கொங்கு என்றால்
தேவர்கள் தேன் சொறிந்த நாடு என பொருள். தலை சிறந்த தமிழகத்தில் சேர,சோழ,பாண்டியர் எனும் உற்ற சகோதரர்கள் ஆட்சியில் சமதர்மம் , ஜனநாயகம், சன்மார்கம் யாவும் தலைத்தோங்கி நின்ற காலத்தில்
ஒரே குலம் ஒருவனே தேவன் என
உலகை படைத்த பார்வதி பரமசிவன் நாமம் பாடி உழவு துறைக்கு முதலிடம் கொடுத்தார்கள்.
மேற்கே திருவிதாங்கூர், கிழக்கே திருவாரூர், வடக்கே திருவேங்கடம், தெற்க்கே திருமதுரை வரை மன்னன் சேரன் தலைமையில் யாவரும் ஒன்று பட்டு திருப்புகழ், தேவார தெய்வ வழிபாடு பட்ட கவிஞர்களுடன் சிற்பிகள் ஒன்றினைந்து ரத, கஜ, துரக, பாதிகளைக் கொண்டு சிவாலயங்களும், விஷ்ணு ஆலயங்களும் கி.பி. ஆறாம் ஙூற்றாண்டாகிய பொன்னர் சங்கர் ஆட்சியில் அமைக்கப்பட்டது.
சேர மன்னனின் துணை கொண்டு நதிகளுக்கு கரைகளும், கற்களை கொண்டு அணைகள் கட்டினர்கள். காவிரி நதியை தாயாக கொண்டு கொங்கு நாட்டின் சேக்கிழார் வம்ச உழவர் பெருமக்கள் நான்கு லட்சம் பேர் திருவாரூரில் தியாகராஜேஸ்வர் ஆலயம் அமைய ஆவண செய்தார்கள். அங்கு பெரிய தேர் ஓட்டி கோலாட்சி செய்துவந்த கொங்கு சீமான் கொழந்தா கவுண்டர் அவர்களின் மறைவிற்க்கு பின்னர் வட நாட்டிலிருந்து சமன மதத்தினர் எனும் கூட்டம் தமிழகத்தில் ஊடுறுவினார்கள்.
அவர்கள் சாதி, மத வேற்றுமைகளையும், தெய்வ வழிபாட்டு முறைகளையும் மாற்று வழியில் புகுத்தினார்கள். மாச்சர்யங்களை உண்டு செய்தும், மக்களிடையே போர்களம் பூண்டு , நாடு சிதறுண்டு, நாடு சீரழிந்து போய் விட்ட காலமிது.
மேற்கே திருவிதாங்கூர், கிழக்கே திருவாரூர், வடக்கே திருவேங்கடம், தெற்க்கே திருமதுரை வரை மன்னன் சேரன் தலைமையில் யாவரும் ஒன்று பட்டு திருப்புகழ், தேவார தெய்வ வழிபாடு பட்ட கவிஞர்களுடன் சிற்பிகள் ஒன்றினைந்து ரத, கஜ, துரக, பாதிகளைக் கொண்டு சிவாலயங்களும், விஷ்ணு ஆலயங்களும் கி.பி. ஆறாம் ஙூற்றாண்டாகிய பொன்னர் சங்கர் ஆட்சியில் அமைக்கப்பட்டது.
சேர மன்னனின் துணை கொண்டு நதிகளுக்கு கரைகளும், கற்களை கொண்டு அணைகள் கட்டினர்கள். காவிரி நதியை தாயாக கொண்டு கொங்கு நாட்டின் சேக்கிழார் வம்ச உழவர் பெருமக்கள் நான்கு லட்சம் பேர் திருவாரூரில் தியாகராஜேஸ்வர் ஆலயம் அமைய ஆவண செய்தார்கள். அங்கு பெரிய தேர் ஓட்டி கோலாட்சி செய்துவந்த கொங்கு சீமான் கொழந்தா கவுண்டர் அவர்களின் மறைவிற்க்கு பின்னர் வட நாட்டிலிருந்து சமன மதத்தினர் எனும் கூட்டம் தமிழகத்தில் ஊடுறுவினார்கள்.
அவர்கள் சாதி, மத வேற்றுமைகளையும், தெய்வ வழிபாட்டு முறைகளையும் மாற்று வழியில் புகுத்தினார்கள். மாச்சர்யங்களை உண்டு செய்தும், மக்களிடையே போர்களம் பூண்டு , நாடு சிதறுண்டு, நாடு சீரழிந்து போய் விட்ட காலமிது.
சடையப்ப வள்ளலின் சொந்த ஊர் திருவெண்ணெய் நல்லூர். சடையப்ப வள்ளல் 12ஆம் நூற்றாண்டில் கொங்கு வேளாளர் குடும்பத்தில் பிறந்தார். இவர் பண்ணை குல வேளாளர் இவரின் சமாதி இன்றும் தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் காணப்படுகிறது.கம்பராமாயணம் கம்பர் இயற்றிய உடன் கம்பர் வரும் போது அவருக்கு நெற்கதிர்வேய்ந்த பந்தலிட்டு இவர் வரவேற்பு அளித்ததால் அவ்வூருக்கு கதிராமங்கலம் என்ற பெயர் வழங்கப்பட்டது. ஈழத்தில் பஞ்சம் வந்தகாலத்தில் தமிழகத்தைச்
சார்ந்த சடையப்ப வள்ளல் என்பார் கப்பல்களில் உணவுப்பண்டங்களை அனுப்பி வைத்தார் என்று வரலாறு சொல்கிறது.
வள்ளல் சடையப்பக் கவுண்டர் கம்பரின் புரவலர். கம்பன் காவியம்
பாடப்பட்ட காலத்தில் சோழப் பேரரசனின் ஆதரவு இல்லாமல் சடையப்ப வள்ளல் ஆதரவுடன்தான் பாடப்பட்டது. அவரைப்
புகழ்ந்துக் கம்பர் 100 பாடல்களுக்கு ஒரு பாடல் வீதம் தன் கம்பராமாயணத்தில் எழுத, மற்றப் புலவர்கள் ஆயிரத்துக்கு ஒரு பாட்டில் குறிப்பிட்டால் போதும் என்றுக் கூறிவிட, "சடையப்ப வள்ளல் நூற்றில் ஒருவர் என்று நினைத்தேன். ஆனால் நீங்கள் கூறியபடி அவர் 'ஆயிரத்தில் ஒருவர்' ஆகிறார். அப்படியே செய்கிறேன்." என்று கம்பர் கூறுவார். கம்பராமாயணம் முடி சூட்டுப் படலத்தில் இராமனுக்கு முடிசூட்டும் போது கிரீடத்தை பண்ணை குல வேளளர் மரபினோர் எடுத்து கொடுக்க வஷிஷ்டன் அணிவித்தான் என்றும் கம்பர் கூறுகிறார்.
புகழ்ந்துக் கம்பர் 100 பாடல்களுக்கு ஒரு பாடல் வீதம் தன் கம்பராமாயணத்தில் எழுத, மற்றப் புலவர்கள் ஆயிரத்துக்கு ஒரு பாட்டில் குறிப்பிட்டால் போதும் என்றுக் கூறிவிட, "சடையப்ப வள்ளல் நூற்றில் ஒருவர் என்று நினைத்தேன். ஆனால் நீங்கள் கூறியபடி அவர் 'ஆயிரத்தில் ஒருவர்' ஆகிறார். அப்படியே செய்கிறேன்." என்று கம்பர் கூறுவார். கம்பராமாயணம் முடி சூட்டுப் படலத்தில் இராமனுக்கு முடிசூட்டும் போது கிரீடத்தை பண்ணை குல வேளளர் மரபினோர் எடுத்து கொடுக்க வஷிஷ்டன் அணிவித்தான் என்றும் கம்பர் கூறுகிறார்.
கவிச்சக்கரவர்த்தி கம்பர் கொங்கு வேளாளர் வள்ளல் சடையப்ப கவுண்டரை பெருமிதப்படுத்தும் விதமாக கொங்கு
மங்கல வாழ்த்தை பாடிக்கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.
கம்பர் பாடிக்கொடுத்த மங்கல வாழ்த்து கொங்குநாட்டுத் திருமணங்களில்
பாடப்பெறுகிறது.
சடையப்ப வள்ளலை யார் நாடி வந்தாலும்
இல்லையென்று சொன்னது கிடையாது, கேட்பர்களுக்கெல்லாம்
வாரி வாரி வழங்கும் குணம் அவரிடம் இருந்தது. அவர் வீட்டு அருகில் ஒரு பாம்புப் புற்று இருந்தது அந்தப்
புற்றுக்கும் தவறாமல் இவர் பால்
வார்த்து வந்தார். இது போல் தனக்குமில்லாமல் எல்லாவற்றையும் தானம் செய்தபின் ஒரு நாள் அவரிடம் வழங்க ஒன்றுமே இல்லாத
நிலையும் ஏற்பட்டது. இந்த நேரத்தில் நம் இறைவன்
அவரைச்சோதிக்க விரும்பினார்.
சோதிக்கும் நேரமும் வந்தது. அவர் வீட்டு வாசல் கதவு தட்டப்பட்டது. மிகவும் ஆவலுடன் சடையப்ப வள்ளல் ஓடிப்போய்ப் பார்க்க, இரண்டு புலவர்கள் தங்கள் புலமையைக் காட்டியபடி சடையப்ப வள்ளர் மேல் மிக அழகாகப் பல பாடல்களைப் புனைந்தனர். 'அவர்களுக்குப் பரிசாக எதாவது தர வேண்டுமே, என்னிடம் தான் ஒன்றுமில்லையே' என்று ஏங்கி அவர்களை அமர வைத்து வீட்டின் பின் புறமிருந்த பாம்புப்புற்றின் அருகே சென்றார். தன் கையை அந்தப் புற்றுக்குள் விட்டார். உள்ளே இருந்தது ஒரு நாகம். அந்த நாகம் சடைய்யப்பரின் கையில் ஒரு மாணிக்கத்தைக் கக்கியது. மனமகிழ்ந்து ஓடிப்போய் ஒரு புலவருக்குப் பரிசாக அதை அளித்தார். ஆனால் மறு புலவருக்கு என்ன செய்வது? எதைப் பரிசாகக் கொடுப்பது? மனம் வெதும்பிப்போனார். செய்வதறியாது திகைத்தார். நேராக அந்தப் புற்றுக்குள் கையைவிட்டு பாம்புக்கடிப்பட்டு இறந்து போகலாம் என்று எண்ணித் திரும்பவும் புற்றின் பக்கம் ஓடி அதற்குள் கையை விட்டார்.
உள்ளே இருந்த நாகம் பார்த்தது. இத்தனை நாள் விடாமல் நம்க்குப்பால் ஊற்றி வருகிறான் இவன். இவனைக் கடிப்பதா?" என்றெண்ணித் தன்னிடமிருந்த மாணிக்கக்கல்லை அவரது கையில் கக்கிவிட்டு இறந்து போனது. தனக்குப்பால் ஊற்றிய புண்ணியவானுக்காகத் தன் உயிரையும் தியாகம் செய்தது. அப்படியே அசந்துபோய் நின்றார் சடையப்பவள்ளல். புலவர்கள் மறைந்து போக இறைவன் காட்சி கொடுத்தார்.
சோதிக்கும் நேரமும் வந்தது. அவர் வீட்டு வாசல் கதவு தட்டப்பட்டது. மிகவும் ஆவலுடன் சடையப்ப வள்ளல் ஓடிப்போய்ப் பார்க்க, இரண்டு புலவர்கள் தங்கள் புலமையைக் காட்டியபடி சடையப்ப வள்ளர் மேல் மிக அழகாகப் பல பாடல்களைப் புனைந்தனர். 'அவர்களுக்குப் பரிசாக எதாவது தர வேண்டுமே, என்னிடம் தான் ஒன்றுமில்லையே' என்று ஏங்கி அவர்களை அமர வைத்து வீட்டின் பின் புறமிருந்த பாம்புப்புற்றின் அருகே சென்றார். தன் கையை அந்தப் புற்றுக்குள் விட்டார். உள்ளே இருந்தது ஒரு நாகம். அந்த நாகம் சடைய்யப்பரின் கையில் ஒரு மாணிக்கத்தைக் கக்கியது. மனமகிழ்ந்து ஓடிப்போய் ஒரு புலவருக்குப் பரிசாக அதை அளித்தார். ஆனால் மறு புலவருக்கு என்ன செய்வது? எதைப் பரிசாகக் கொடுப்பது? மனம் வெதும்பிப்போனார். செய்வதறியாது திகைத்தார். நேராக அந்தப் புற்றுக்குள் கையைவிட்டு பாம்புக்கடிப்பட்டு இறந்து போகலாம் என்று எண்ணித் திரும்பவும் புற்றின் பக்கம் ஓடி அதற்குள் கையை விட்டார்.
உள்ளே இருந்த நாகம் பார்த்தது. இத்தனை நாள் விடாமல் நம்க்குப்பால் ஊற்றி வருகிறான் இவன். இவனைக் கடிப்பதா?" என்றெண்ணித் தன்னிடமிருந்த மாணிக்கக்கல்லை அவரது கையில் கக்கிவிட்டு இறந்து போனது. தனக்குப்பால் ஊற்றிய புண்ணியவானுக்காகத் தன் உயிரையும் தியாகம் செய்தது. அப்படியே அசந்துபோய் நின்றார் சடையப்பவள்ளல். புலவர்கள் மறைந்து போக இறைவன் காட்சி கொடுத்தார்.
"உன்னைச் சோதிக்கவே நான் வந்தேன், இழந்த செல்வம் உனக்குத் திரும்பிக் கிடைகட்டும். அமோகமாக வாழ்வாயாக"
என்று ஆசிகள் வழங்கினார். பாம்புக்கும் மோக்ஷம்
கிடைத்துவிட்டது.
பண்ணை
குலத்தார்களின் ஆட்சியை நிலைபெறசெய்தும் சைவ சித்தாந்த முறைபடி மட்டுமே வழிபாடு செய்ய
அருளாசி வழங்கிய அன்னை எட்டுக்கை அம்மன் எட்டி மர விருச்சட்தின் புற்றிலேயே குடி
கொண்டு விட்டாள்.
Subscribe to:
Comments (Atom)


